வரலாற்று பிரசித்தி பெற்ற மண்டூர் – கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் வெகு சிறப்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
சுவாமி புஸ்பக விமானத்தில் உள்வீதி, வெளி வீதி வலம் வந்து மண்டூர் கிராமத்தின் அருகே மட்டக்களப்பு வாவி சங்கமிக்கும் இடத்தில் அமையப் பெற்றுள்ள சபா மண்டபத்தில் வைக்கப்பட்டு அங்கு விசேட பூஜைகள் இடம்பெற்றதை தொடர்ந்து மட்டக்களப்பு வாவியும், மூங்கில் ஆறும் சங்கமிக்கும் இடத்தில் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ தீர்த்தோற்சவம் நடைபெற்றது.
கடந்த 06 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மண்டூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெற்றது.