Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மடு, நல்லூர், வற்றாப்பளை கோவில்களிலும் பாதுகாப்பு

May 11, 2019
in News, Politics, World
0
பயங்கரவாதத் தாக்குதல் கிறிஸ்தவ தேவாலயங்களை தாக்கியதால் இப்போது பாதுகாப்பு முழுவதும் தேவாலயங்களை நோக்கியே உள்ளது. இதனால் பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு மடு, நல்லூர் கந்தசாமி கோவில், வற்றாப்பளை அம்மன் கோவில்  ஆகியவையாகக்கூட  இருக்கலாம்.  ஆகவே மக்கள் அதிகமாக வாழும் இந்த பகுதிகளில் பாதுகாப்பை அரசு பலப்படுத்த வேண்டும். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று  நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தெரிவித்ததாவது,
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொல்லப்பட்ட எமது மக்களுக்கான அஞ்சலியை நான் இந்த சபையில் செலுத்துவதுடன், இந்த மனிதாமிபானமற்ற செயற்பாட்டைச் செய்தவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன். எனது எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இந்த தாக்குதலில்  நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்துவது மற்றும் மக்கள் செறிவாக வாழக்கூடிய இடங்களில் தாக்குதலை நடத்துவது என்ற இரண்டு நோக்கங்கள்  இருந்துள்ளன. இது மிகவும் மூர்க்கத் தனமானதும் முஸ்லிம் சமூகத்தை எமது சமூகத்தில் இருந்து பிரித்துப்பார்க்கின்ற செயலுமாக   இடம்பெற்றுள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இந்த பயங்கரவாதம் என்பது வேறு, விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் என்பது வேறு என்பதை எதிர்க்கட்சி தலைவர் சபையில் சுட்டிக்காட்டினார். எமது போராட்டம் வேறு இந்த தீவிரவாதம் வேறு என்பதை அவர் உணர்ந்துள்ளார் என்பது மகிழ்ச்சியாகும். இவ்வாறான மோசமான பயங்கரவாத செயற்பாடுகளை நாம் ஏற்கவில்லை.
இந்த பயங்கரவதத்தை நாம் அனைவரும் இணைந்து தடுக்க வேண்டும். எமது சமூகத்தை அமைதியாக வைத்துள்ளதற்காக நான் எமது கிறிஸ்தவ மத தலைவர்களுக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன். இந்த தாக்குதல் கிறிஸ்தவ தேவாலயங்களை தாக்கியதால் இப்போது பாதுகாப்பு முழுக்க தேவாலயங்களை நோக்கியே உள்ளது.
ஆனால் ஏனைய மக்கள் செறிந்து வழிபாடும் வணக்கஸ்தலங்கள் மீதும் அச்சுறுத்தல் உள்ளது. இந்த தீவிரவாதிகள் தமது தாக்குதலை மாற்றிகூட செய்யலாம். உதாரணமாக மடு, நல்லூர் கந்தசாமி கோவில், வற்றாப்பளை அம்மன் கோவில் ஆகியவற்றைக்கூட இலக்கு வைக்கலாம். ஆகவே மக்கள் அதிகமாக வாழும் இந்த பகுதிகளில் பாது­காப்பை அரசு பலப்படுத்த வேண்டும்.
மேல்நோக்கி பறக்கும் கமராக்களின் செயற்பாடுகள் குறித்தும் பேசப்படுகின்றது. வணக்கஸ்தலங்கள் மீதும் இவை பறக்கவிடப்படுகின்றன. ஆகவே இது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பயங்கரவாத  செயற்பாடுகளை அரசியல் மயமாக்காது நியாயமாக இது குறித்து செயற்பட வேண்டும். அத்துடன் அரசியல் கைதிகளை விடுவிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விரைவுபடுத்த வேண்டும்-என்றார்.
Previous Post

பல்கலை மாணவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் என்ன தொடர்பு?

Next Post

சஹ்ரான் உயிரிழந்துள்ளாரா ; மகளின் குருதி மாதிரி பரிசோதனைக்கு

Next Post

சஹ்ரான் உயிரிழந்துள்ளாரா ; மகளின் குருதி மாதிரி பரிசோதனைக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

BREAKING NEWS: உண்மையான ஊடகவிலாளர்களுக்கு முதலிடம் – கிருபா பிள்ளை

BREAKING NEWS: உண்மையான ஊடகவிலாளர்களுக்கு முதலிடம் – கிருபா பிள்ளை

July 2, 2026
நடிகர் அஷ்ரஃப் நடிக்கும் ‘போட்டோகிராபர் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அஷ்ரஃப் நடிக்கும் ‘போட்டோகிராபர் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 2, 2026
ஐக்கிய அமெரிக்கா 16 அணிகள் சுற்றில் பெல்ஜியத்தை சந்திக்கவுள்ளது

ஐக்கிய அமெரிக்கா 16 அணிகள் சுற்றில் பெல்ஜியத்தை சந்திக்கவுள்ளது

July 2, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

சஜித் பிரேமதாசவும் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க முடியாது – ஜனபலய கூட்டமைப்பு திட்டவட்டம்

July 2, 2026

Recent News

BREAKING NEWS: உண்மையான ஊடகவிலாளர்களுக்கு முதலிடம் – கிருபா பிள்ளை

BREAKING NEWS: உண்மையான ஊடகவிலாளர்களுக்கு முதலிடம் – கிருபா பிள்ளை

July 2, 2026
நடிகர் அஷ்ரஃப் நடிக்கும் ‘போட்டோகிராபர் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அஷ்ரஃப் நடிக்கும் ‘போட்டோகிராபர் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 2, 2026
ஐக்கிய அமெரிக்கா 16 அணிகள் சுற்றில் பெல்ஜியத்தை சந்திக்கவுள்ளது

ஐக்கிய அமெரிக்கா 16 அணிகள் சுற்றில் பெல்ஜியத்தை சந்திக்கவுள்ளது

July 2, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

சஜித் பிரேமதாசவும் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க முடியாது – ஜனபலய கூட்டமைப்பு திட்டவட்டம்

July 2, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures