மகாராஷ்டிராவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
அவுரங்கபாத் நோக்கி சென்ற அரசு பேருந்தொன்றின் மீது கண்டெய்னர் லொறி ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.