வெசாக் பண்டிகையை முன்னிட்டு, பௌத்த பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை அளித்து மூன்று புதிய முத்திரைகள் வெளியிடப்படவுள்ளன என்று தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவை 10 ரூபா, 15 ரூபா, 30 ரூபா ஆகிய பெறுமதிகளைக் கொண்டதாக இருக்கும் என்று முத்திரை வெளியீட்டு பணியகத்தின் பணிப்பாளர் எச்.வீ.டீ.அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 23 ஆம் திகதி மேலும் நான்கு முத்திரைகளையும், அடுத்த மாத முற்பகுதியில் மேலும் மூன்று முத்திரைகளையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் 23 ஆம், 24 ஆம்,25 ஆம் திகதிகளில் கொழும்பில் முத்திரை கண்காட்சியும் இடம்பெறவுள்ளது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.