யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பல பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அவர் தெரிவித்தாவது-,
அண்மைய நாள்களில் யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்துள்ளன. கொக்குவில், கோப்பாய், சுன்னாகம், மானிப்பாய் ஆகிய இடங்கள் அதிக வன்முறைகள் நடந்த இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அந்த இடங்களில் பல பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
பிரதேசங்களைக் கண்காணிக்கவும், வன்முறைகளில் ஈடுபடுவோரைக் கைது செய்யலும் பல பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்தப் பிரதேசங்களில் தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.அந்தப் பகுதிகள் தற்போது பொலிஸாரின் முழுக் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. விரைவில் வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள்.- என்றார்.