பொலிஸாரின் கார் விபத்து: காயங்களுக்கு இலக்கான இருவர் வைத்தியசாலையில்

பொலிஸாரின் கார் விபத்து: காயங்களுக்கு இலக்கான இருவர் வைத்தியசாலையில்

கனடாவின் டொரான்டோ நகரில் தனியாருக்கு சொந்தமான வாகனம் ஒன்று பொலிஸ் காருடன் மோதி விபத்திற்கு உள்ளானதில் இரு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து உள்ளூர் நேரப்படி நேற்று (சனிக்கிழமை) இரவு சுமார் 9.30 அளவில் இடம்பெற்றுள்ளது. கிங் மற்றும் பிராண்ட் சாலைகளின் சந்திப்பொன்றிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தினைத் தொடர்ந்து காயமடைந்த இரு பொலிஸாரும் அவசர உதவி பிரிவினரால் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

எவ்வாறான போதும், காயமடைந்த பொலிஸாரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, விபத்திற்கு உள்ளான வாகனங்களின் நிலை குறித்த தகவல்கள் எதனையும் அவர்கள் வெளியிடவில்லை.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News