நாட்டில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி இலக்கு 65 லட்சம் வாக்குகள் ஆகும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஆயிரம் சிறைச்சாலைகளில் சிறைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் கருத்துச் சுதந்திரத்தை ஜனநாயக வாக்கைப் பயன்படுத்தி மக்களுக்கு தீர்மானிப்பதற்கான ஆயுதம் கிடைத்துள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.