இலங்கையில் பெண்கள் தலைமையிலான வர்த்தகங்களை அபிவிருத்தி செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது.
இதற்காக பெண் தொழில்முனைவோர் நிதியத்தில் இருந்து, ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு 12 தசம் ஆறு மில்லியன் டொலர்கள் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிதியின் கீழ், இலங்கையில் பெண்கள் தலைமையிலான வர்த்தக நடவடிக்கைகளுக்கான வசதிகளை ஏற்படுத்தவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.













