விடுதலை புலிகளின் சீருடை மற்றும் தொப்பியை வைத்திருந்தார் என்ற குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யபட்டுள்ளார்.
வவுனியா புதிய பஸ் நிலையத்தில் இன்று, சந்தேகத்துக்கிடமான முறையில் நின்ற இளைஞரிடம், பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது அவரிடமிருந்து விடுதலை புலிகளின் சின்னம் பொறிக்கபட்ட தொப்பி மற்றும் சீருடை ஒன்றை பொலிஸார் மீட்டனர்.
குறித்த சம்பவத்தில் 25 வயதான யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே கைதுசெய்யபட்டுள்ளார். அவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.