பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை ஆண்ட்ரியா. தொடர்ந்து, தன்னுடைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். நடிப்பிலும், தன்னுடைய திறமையைக் காட்டி, தன்னை தனித்துவம் மிக்கவர் என அடையாளம் காட்டி வந்தார்.
வட சென்னை படத்துக்குப் பின், அவர் பெரிய அளவில் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்தார். நீண்ட இடைவெளி ஏன்? என பலரும் அவரைக் கேட்கத் துவங்கினர். இதற்கு பதில் அளிப்பது போல, அவர் தன்னுடைய படம் ஒன்றை வெளியிட்டு, அதற்கான விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் வந்திருக்கிறேன். மன அழுத்தம் நிறைந்த என் வாழ்க்கை என்னை உடல் ரீதியிலும்; மன ரீதியிலும் ரொம்பவே பாதித்து விட்டது. உடல் ரீதியிலும்; மன ரீதியிலும் பாதிக்கப்பட்டிருந்ததால், இதிலிருந்தெல்லாம் விடுபட வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு ஆயுர் வேத மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளத் துவங்கினேன். காரே என்று செல்லப்படும் அந்த மருத்துவ முறை, பாதிப்புகளில் இருந்து என்னை மீட்டெடுத்திருக்கிறது.
என்னைப் போலவே காபிக்கு அடிமையாகி இருப்பவர்களுக்கு இந்த மருத்துவ சிகிச்சை முறை உகந்ததல்ல. அதனால், ஒரு கப் மூலிகை தேநீர் மற்றும் யோகாவுடன் ஒவ்வொரு நாளையும் துவங்கினேன். தற்போது, புதுத் தெம்புடன், புது மனுஷியாக எழுந்து விட்டேன். டாக்டர் பிரகாஷ் கல்மேட் தலைமையிலான காரேவில் உள்ள குழுவினருக்கு என்னுடைய நன்றி.
இவ்வாறு ஆண்ட்ரியா கூறியிருக்கிறார்.