புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கட்சிகள், தனிநபரில் தங்கியிருக்காது, வேலைத்திட்டமொன்றின் அடிப்படையில் ஒன்றிணைந்து போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.