மதகும் புதர்களும் நிறைந்த இடத்தில் இளம் பெண் ஒருவரின் சடலத்தை வாழைச்சேனைப் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.
கிரான் பிரதேச செயலகத்துக்குச் செல்லும் வீதியில் மதகு மற்றும் வாகை மரங்களடர்ந்த பகுதியில் குருதிக் கறையுடன் பெண்ணின் சடலம் காணப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மத்திய கிழக்கு நாடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து விட்டு குறித்த பெண் நாடு திரும்பிருக்கலாம், சடலத்தின் அருகே சூட்கேஸ் உள்ளிட்ட சில ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது கொலையாக இருக்காலம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.