நடிகை அமலாபால், இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு, சில காலம், சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவர், மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு, அதற்கான முயற்சியில் இறங்க, விஜய்-அமலாபால் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு, அது விவகாரத்து வரை நீண்டு விட்டது.
ஒரு கட்டத்தில், வேறு வழியின்றி, இருவரும் விவகாரத்து தீர்ப்போடு நிரந்தரமாக பிரிந்து விட்டனர். இதன் பின், மீண்டும் நடிக்கத் துவங்கினார் அமலா பால். ஆடை, அதோ அந்த பறவைப் போல என பல படங்களில் நடிக்கத் துவங்கினார்.
இதற்கிடையில், ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் வெளி நாடு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் அமலா பால், அங்கு விதவிதமான போட்டோக்களை எடுத்து மகிழ்கிறார். அப்படித்தான், முழங்காலுக்கு மேல் தூக்கிக் கட்டப்பட்ட கைலி பனியனோடு செக்சியாக ஒரு புகைப்படம் எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பரவவிட்டார். தொடர்ச்சியாக, தன்னை செக்சியாக காட்டிக் கொள்ள விரும்பும் அமலாபால், இதற்காக, தான் தொடர்ச்சியாக எடுக்கும் படங்களை வெளியிட்டு வருகிறார். லேட்டஸ்ட்டாக, ஒரு பாறையில் படுத்து உறங்குவது போன்ற ஒரு கறுப்பு-வெள்ளை புகைப்படத்தை எடுத்து ட்விட்டர் மூலம் வெளியிட்டிருக்கிறார்.
அந்தப் புகைப்படத்தோடு, இயற்கையின் மடியில் குழந்தையாய் நான் என்று கேப்ஷனும் போட்டு இருக்கிறார். இதெல்லாம் யார் சொல்லிக் கொடுப்பது அம்மணி என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் போட்டு, அமலாபாலை கலாய்க்கின்றனர்.