எல்லா நடிகர்-நடிகையரும் நடிகர் அஜித் கூட சேர்ந்து நடிக்கணும்னு ஆசைப்பட்டுக் கொண்டிருக்க, நடிகர் அஜித்தோ, நடிகர்கள் மோகன்லால் மற்றும் பிரபாசுடம் சேர்ந்து நடிக்க ஆசைப்படுவதாக, அவர்களிடமே கூறியிருகிறார்.
போனிகபூர் தயாரிப்பில், இயக்குனர் வினோத் இயக்கும் தல 59 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, ஐதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருக்கிறது. தென் இந்தியாவிலேயே மிகப் பெரிய ஸ்டுடியோ அதுதான். அதனால், ஒரே நேரத்தில் பல்வேறு படப்பிடிப்புகள், அந்த ஸ்டூடியோவுக்குள் நடப்பது வழக்கம்.
தல 59 படத்தின் படப்பிடிப்புக்கு போன இரண்டாவது நாள்… இயக்குனர் பிரிதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் அரபிக்கடலிண்ட சிம்ஹம் படப்பிடிப்பு நடக்கும் தகவல் அஜித்துக்கு கிடைத்தது. உடனே,.அழைப்பு இல்லாமலேயே மோகன்லாலை தேடிப் போய் பார்த்து பேசினார். அதேபோல, அதே ஸ்டூடியோவிலேயே, நடிகர் பிரபாஸ் படம் சூட்டிங் நடக்கிறது என தெரிய வந்தது. உடனே, அங்கும் சென்று, பிரபாசை சந்தித்து பேசிவிட்டு திரும்பினார்.
இருவரும், நடிகர் அஜித்திடம் பல மணி நேரம் பேசிவிட்டுத்தான் அனுப்பி வைத்தனர். இருவரும், நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படத்தை பார்த்ததாகவும்; படம் நன்றாக வந்திருப்பதாகவும் பாராட்டினர். அந்த மகிழ்ச்சியினூடே, இருவரிடமும் நடிகர் அஜித் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார். உங்களோடு, விரைவில் நான் இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான் அது.