ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுமார் 5 மணி நேரம் சாட்சியமளித்துள்ளார்.
அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று காலை 9.30 மணி அளவில் அதில் ஆஜராகியுள்ளார்.
இதன்போது, விவசாயத்துறை அமைச்சிற்காக ராஜகிரியவில் அமைந்துள்ள தனியார் கட்டடத்தை பயன்படுத்துமாறு தான் ஆலோசனை வழங்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.
ஒன்றரை மணி நேரம் சாட்சியம் வழங்கியதன் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய பிரதமர் மீண்டும் மதியம் 1.30 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையில் ஆஜரானதோடு பிற்பகல் 4.30 மணி வரை விசாரணை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.