ரஷ்யாவில் பாலியல் தொழிலாளி போல உடையணிவதாக ஆசிரியை மீது பள்ளி உரிமையாளர் கோபமாக குற்றஞ்சாட்டிய நிலையில் தனது பணியை ஆசிரியை ராஜினாமா செய்துள்ளார்.டடியானா குவ்ஷினிகோவா (38) என்ற பெண் அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் டடியானா மோசமாக உடையணிவதாகவும், அதனால் அவரிடம் படிக்கும் மாணவர்களின் மனம் கெடுவதாகவும் சில மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதையடுத்து பள்ளியின் உரிமையாளரான கெயின், டடியானாவுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டார்
அதில், இது போல பாலியல் தொழில் செய்பவர்கள் தான் உடையணிவார்கள், வெட்கமாக இல்லையா, யாரை கவர்வதற்காக இப்படி உடையணிகிறாய், ஆசிரியை என்ற சொல்லை பயன்படுத்தவே உனக்கு உரிமை கிடையாது, உன்னால் பள்ளிக்கூடத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து அதிகளவிலான அழுத்தம் காரணமாக தனது ஆசிரியை பணியை ராஜினிமா செய்துள்ளார் டடியானா.
அவர் கூறுகையில், எல்லா பெற்றோரும் என்னை குறை கூறவில்லை, நான் மீண்டும் பணியில் சேர வேண்டும் என பலர் வற்புறுத்துகிறார்கள்