பாலமுரளி கிருஷ்ணாவை தொடர்ந்து மற்றொரு பிரபலம் மரணம்
கர்நாடக இசை உலகில் மிகவும் பிரபலமானவர் பாலமுரளிகிருஷ்ணா.
பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை பெற்ற இவர் நவம்பர் 22ம் தேதி மாலை அதாவது நேற்று உயிரிழந்துள்ளார். இவரின் மரணமே பலரை துக்கத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், தற்போது மற்றொரு பிரபலம் உயிரிழந்துள்ளார்.
சத்ரியன், சபாஷ் போன்ற தமிழ் படங்களை இயக்கிய K. சுபாஷ் மரணமடைந்துள்ளார். இவர் ஹிந்தியில் சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, ஹவுஸ்புல் 3 போன்ற படங்களுக்கு திரைக்கதை அமைத்துள்ளார். இந்த தகவலை தயாரிப்பாளர் தனஞ்செயன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
Sad to report the passing away of another superb talent… Dir. Subaash of films like #Chatriyan, #Sabaash & writer of #ChennaiExpress