தேவைப்படுகின்ற போது உரிய காலத்துக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் புதிய அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமாக இருப்பதனால் கலைக்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லையெனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (07) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியதாக ஐ.ம.சு.மு.யின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால், உடன் பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்பது அரசாங்கத்தின் உள்ரங்கமான கருத்தாகும்.