பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு யாராவது பிரேரணையொன்றைக் கொண்டுவந்தால் அதற்கு மக்கள் விடுதலை முன்னணி வாக்களிக்கத் தயாராகவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்தார்.
தேர்தலுக்கு செல்வதா? இல்லையா? என்பதுவல்ல தற்பொழுதுள்ள பிரச்சினை. அரசியல் யாப்பை மீறிச் செயற்படுவது என்பதாகும். நாம் தேர்தலுக்கு செல்வதற்கு அஞ்சவில்லை.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினர் தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனத் தீர்மானிக்குமாயின் சட்ட ரீதியாக தேர்தலுக்கு செல்ல முடியும்.
இதற்கான பிரேரணையொன்றை யாராவது கொண்டு வந்தால் அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம் எனவும் அனுர குமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.