இந்த அரசாங்கம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரையில் அதாவது டிசப்பர் மாதம் 7 ஆம் திகதி வரை தொடரும் என்று தெரிவித்த அமைச்சர்கள் செயலாளர்கள் இராஜாங்க அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் ஆகியோரும் வழமை போன்று கடமைகளில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை வெளிப்படும் பிரேரணை தொடர்பாக அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவிக்கையில் பாராளுமன்ற நிலையியல் கட்டளைக்கு மாறாக இது நடைபெற்றுள்ளது. இதனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இது செல்லுக்கடியற்றதாகும் என்றும் தெரிவித்தார்.
கேள்வி: பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றிருந்த சிலர் இன்று பாராளுமன்த்தில் கட்சி மாறியுள்ளனர். இவர்களுக்குப் பதிலாக புதியவர்கள் நியமிக்கப்பபடுவார்களா?
அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த: ஆம் இதனை ஜனாதிபதியே மேற்கொள்வார்.