சட்டம் ஒழுங்கு அமைச்சுக்குப் பொறுப்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்புப் பிரிவினரின் நடவடிக்கைகளுக்கு வழங்கியுள்ள சுதந்திரம் தான் போதை ஒழிப்பு நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்குக் காரணம் என பொதுஜன ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
பாதுகாப்புப் பிரிவுக்கு ஜனாதிபதி உடனடித் தீர்மானம் எடுப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார். இதனால், தான் போதைப் பொருளுடன் தொடர்புபட்டவர்களைக் கைது செய்ய முடியுமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் போது ஜனாதிபதி இடையில் தலையீடு செய்வதில்லை. அழுத்தங்களைக் கொடுப்பதில்லை. போதைப் பொருளுடன் தொடர்புபட்ட அத்தனை பேரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் மஹிந்த அமரவீர எம்.பி. மேலும் கூறினார்.