பாடசாலை மாணவருக்கு 2016ம் ஆண்டு முதல் பாடசாலை சீருடைக்காக பண வவுச்சர்கள் வழங்க பட்டு வருகிறது. இந்நிலையில்
பாடசாலை மாணவர்களுக்கு பெற்று கொடுக்கப்படும் வவுச்சர் தொடர்பில் பல குறைப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும்,
மீண்டும் பாடசாலை சீறுடைக்கான துணியை நேரடியாக வழங்க வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
எனினும், புதிய முறையில் எந்த விதமான மாற்றத்தையும் எதிர்காலத்தில் மேற்கொள்ள எதிர்ப்பார்க்கவில்லை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.