Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பஸ் கட்டணம் : வலுக்கும் கட்சிகளின் போராட்டங்கள்!

January 28, 2018
in News, Politics, World
0

பஸ் கட்டண உயர்வை ரத்துசெய்யக் கோரி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடந்துவருகிறது. ஏற்கெனவே திமுக அறிவித்துள்ள சிறைநிரப்பும் போராட்டத்தின் தொடர்ச்சியாக, பிப்ரவரி 1 முதல் தொடர் மறியல் போராட்டத்தில் இறங்கப்போவதாக சிபிஎம் கட்சி அறிவித்துள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, தமிழக அரசு பயணக் கட்டணத்தை கடந்த 19ஆம் தேதி உயர்த்தியது. இரவு நேரம் அறிவித்து மறுநாள் அதிகாலையிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என அவசரகதியில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் 55% முதல் 100%வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டது மட்டுமில்லாமல், தாறுமாறாக கட்டணமுறை கொண்டுவரப்பட்டதும் பயணிகளுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. பேருந்துகளில் நடத்துநர்களும் பொதுமக்களும் வாக்குவாதம், சச்சரவில் ஈடுபடும் அளவுக்கு கட்டண உயர்வு மோசமான விளைவுகளை உண்டாக்கியது.

இதற்கிடையில், பேருந்துகளில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள், கட்டண உயர்வை ரத்துசெய்யவேண்டும் என போராட்டத்தில் குதித்தனர். மாநிலம் முழுவதும் ஒரு வாரமாக கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மதுரை, சென்னை, கோவை என பல இடங்களில் போராட்டம்நடத்தும் மாணவர்களிடம் போலீஸ் துறையினர் அத்துமீறி நடந்துகொள்கின்றனர். இது தொடர்பான காட்சிகள் ஊடகத்தில் வெளியாகியுள்ளன.

அரசியல் கட்சிகளில், சிபிஎம், சிபிஐ கட்சியினர் மாணவர்கள் போராட்டத்தைத் தொடங்கியபோதே, ஆங்காங்கே தன்னிச்சையாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 22ஆம் தேதியன்று சிபிஎம் கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. 23ஆம் தேதி விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னையிலும் மறுநாள் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டது.

பாமக சார்பில் 25ஆம் தேதி சென்னையில் அன்புமணி தலைமையிலும் விழுப்புரத்தில் ராமதாஸ் தலைமையிலும் போராட்டம் நடத்தப்பட்டது. மற்ற மாவட்டங்களிலும் போராட்டம் நடந்தது.

திமுகவின் சார்பில் அழைப்புவிடுக்கப்பட்ட இன்றைய போராட்டத்தில் மதிமுக, காங்கிரஸ் உட்பட கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொண்டன. இந்தப் போராட்டத்தோடு நின்றுவிடாமல் தேவைப்பட்டால் அடுத்த கட்டமாக 29ஆம் தேதி முதல் திமுகவின் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், அநியாய பேருந்து கட்டண உயர்வை உடன் ரத்து செய்ய வேண்டும், போராடுகிற மாணவர்கள் – இளைஞர்கள் – மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெறுவதோடு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி, பிப். 1 முதல் மாவட்ட / வட்ட தலைநகரங்களில் சிபிஎம் கட்சியானது தொடர் மறியல் போராட்டத்தை நடத்தும் என்று அதன் மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இது குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில், “ அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் அநியாய பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்களும், அனைத்துப் பகுதி பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் போராடி வருகின்றனர். குறிப்பாக லட்சக்கணக்கான மாணவர்கள் கட்டண உயர்வை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராடுவது என்ற உறுதியோடு வீதியில் இறங்கி வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நியாயமானக் குரலை ஏற்று கட்டண உயர்வை ரத்து செய்வதற்கு பதிலாக, அடக்குமுறையை எடப்பாடி அரசாங்கம் ஏவி வருகிறது. ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர், சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவர் – வாலிபர் தலைமை மீது குறிவைத்து வேட்டையாடும் வகையில் கடுமையான கிரிமினல் வழக்குகளை புனைந்து சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்துவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசின் இத்தகைய ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது” என்றும் இராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தற்போது, டிக்கெட் விலையை குறைத்து, தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், இதை எதிர்க்கட்சிகள் ஏற்குமா, அல்லது போராட்டங்கள் தொடருமா என்பது விரைவில் தெரியவரும்.

Previous Post

தேர்தலுக்கு முன் பிணைமுறி மோசடி விவாதத்தை நடத்த கோரிக்கை

Next Post

ரயில் முன் பாய்ந்த மதிமுக தொண்டர்

Next Post

ரயில் முன் பாய்ந்த மதிமுக தொண்டர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

July 22, 2026
நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

July 22, 2026

Recent News

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

July 22, 2026
நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

July 22, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures