பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் பால்மா கம்பனிகள் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து இன்று கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார்.
சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மா தட்டுப்பாடு தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அமைச்சர் இதனைக் கூறினார்.