நாட்டிலுள்ள சாதாரண முஸ்லிம் மக்கள் மீது ஒட்டப்பட்டுள்ள பயங்கரவாத குற்றச்சாட்டிலிருந்து அவர்களை விடுவிக்கும் பொறுப்பு எதிர்கால நாட்டின் தலைவரும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஸவுக்கு உரியது என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
பெபிலியான விகாரைக்கு சென்று இன்று ஆசீர்வாதம் பெற்ற போதே தேரர் இதனைக் கூறினார்.
புலிகளின் யுத்தத்தை முடித்து விட்டு தமிழர்கள் மீது இருந்த பயங்கரவாத அட்டையை கலட்டியது போன்று முஸ்லிம்களின் மீதும் ஒட்டப்பட்டுள்ள பயங்கரவாதத்தை கலட்டிவிடுமாறும் தேரர் கேட்டுக் கொண்டார்.