Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களை முடிவிற்கு கொண்டுவர வேண்டும் | பத்திரிகையாளர் பாதுகாப்பு குழு

July 28, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களை முடிவிற்கு கொண்டுவர வேண்டும் | பத்திரிகையாளர் பாதுகாப்பு குழு

இலங்கையின் பாதுகாப்பு படையினர் பத்திரிகையாளர்கள் மீது மேற்கொண்ட தாக்குதல் குறித்து அதிகாரிகள் முழுமையான துரித விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு எக்ஸ்போஸ் நியுசின் பணியாளர்களை துன்புறுத்துவதை அதிகாரிகள் நிறுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜூலை 22 ம் திகதி அதிகாலை தனியார் டிஜிட்டல் செய்திதளமான எக்ஸ்போஸ் நியுசின் மூன்று பத்திரிகையாளர்கள் உட்பட நான்கு பத்திரிகையாளர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் தாக்குதலை மேற்கொண்டனர், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பகுதி மீதான பாதுகாப்பு தரப்பினரின் நடவடிக்கை குறித்தும் பின்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் குறித்தும் செய்திசேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே தாக்கப்பட்டனர் என சிபிஜேயுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட இந்த பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டங்கள் குறித்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட மூன்று பத்திரிகையாளர்களை தேடி 27 ம் திகதி எக்ஸ்போசர் நியுசின் அலுவலகத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர் என அந்த பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

தொடரும் பொருளாதார அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் மூண்டுள்ளன,ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச 13 ம் திகதி நாட்டிலிருந்து தப்பிவெளியேறிய பின்னர் மறுநாள் தனது பதவியை இராஜினாமா செய்தார்.21ம் திகதி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார்.

இலங்கையில் அரசியல் அமைதியின்மை குறித்த செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்டுள்ள பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் உடனடியாக முடிவிற்குவரவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் திட்ட இயக்குநர் கார்லோஸ் மார்ட்டினெஸ் மட்ரிட்டில் தெரிவித்தார்.

அதிகாரிகள் இந்த தாக்குதல்கள்குறித்து முழுமையாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்,குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவேண்டும்,எக்ஸ்போசர் நியுசின் பணியாளர்களை துன்புறுத்துவதை நிறுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 22 ம் திகதி பிபிசியின் கமரா இயக்குநர் மற்றும் வீடியோ எடிட்டர் ஜரீன் சாமூவேலை பாதுகாப்பு தரப்பினர் தாக்கினார்கள் – கொழும்பு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்ட முகாமின் மீது படையினரின் தாக்குதல் குறித்து செய்தி சேகரித்துக்கொண்டிருந்தவேளையே அவர் மீது தாக்குதல் இடம்பெற்றது,என பிபிசியின் செய்திகளும் எங்களுடன் தொலைபேசி மூலம் உரையாடிய சாமுவேலும் தெரிவித்தனர்.

நானும் எனது குழுவினரும் நாங்கள் ஊடகவியலாளர்கள் என்பதற்கான ஆவணங்களை press IDs and foreign accreditation cardஅதிகாரிகளிடம் காண்பித்தோம் ஆனால் அதிகாரிகள் மீண்டும் மீண்டும் என்னை தாக்கினார்கள் நிலத்தில் தள்ளிவிழுத்தி வயிற்றில் காலால் உதைத்தார்கள் என தெரிவித்த சாமுவேல் எனது கையடக்க தொலைபேசியை பறித்து அதிலிருந்த வீடியோக்களை அழித்த பின்னர் திருப்பி கொடுத்தனர் எனவும் தெரிவித்தார்.

இதன் காரணமாக தான் உள்ளுர் மருத்துவனையில் காயங்களிற்கு கிசிச்சை பெற்றதாக அவர் தெரிவித்தார்.

Previous Post

1.7 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டுப்பணத்தை உண்டியல் மூலம் அனுப்ப வைத்திருந்த இளைஞன் கைது

Next Post

கோட்டாபயவின் வெளியேற்றமும் ரணில் விக்ரமசிங்கவின்  வருகையும் பேராசிரியர் எம். ஏ. நுஃமான்

Next Post
கோட்டாபயவின் வெளியேற்றமும் ரணில் விக்ரமசிங்கவின்  வருகையும்  பேராசிரியர் எம். ஏ. நுஃமான்

கோட்டாபயவின் வெளியேற்றமும் ரணில் விக்ரமசிங்கவின்  வருகையும் பேராசிரியர் எம். ஏ. நுஃமான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

May 29, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரத்தில் சிறுமி துஷ்பிரயோக வழக்கு ; பொலிஸார் பாரபட்சம் | தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

May 29, 2026
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை

பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவு!

May 29, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

இனப்படுகொலை நினைவுகூரல்கள் குறித்து ஜனாதிபதி மௌனம் காப்பது ஏன்? – சர்வஜன அதிகாரம் கட்சி

May 29, 2026

Recent News

மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

May 29, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரத்தில் சிறுமி துஷ்பிரயோக வழக்கு ; பொலிஸார் பாரபட்சம் | தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

May 29, 2026
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை

பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவு!

May 29, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

இனப்படுகொலை நினைவுகூரல்கள் குறித்து ஜனாதிபதி மௌனம் காப்பது ஏன்? – சர்வஜன அதிகாரம் கட்சி

May 29, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures