உள்நாட்டு, சர்வதேச ஊடகவியலாளர்கள் எழுப்பி கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ திணறியுள்ளார்.
கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் விசேட செய்தியாளர் மாநாடு ஒன்று நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடி பதில் வழங்க முடியாமல் திணறிய கோத்தபாய, அதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் திருப்பியுள்ளார்.
கடந்த ஆட்சி காலத்தில் போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்தவை, அந்த ஆட்சி காலத்தில் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் ஊடாக ஏற்பட்ட பாரிய கடன் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காக வெளிநாட்டு முதலீடு தொடர்பான திட்டம் தொடர்பிலும் ஐக்கிய நாடுகளுடன் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
பல கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் கோத்தாபய ராஜபக்ஷ பதிலளித்துள்ளார். ஏனைய கேள்விகளுக்கு மஹிந்த ராஜபக்ஷவே பதிலளித்துள்ளார்.