இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (16) கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற ரி.20 அரையிறுதி ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்து கொண்டது.
இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் பங்களாதேஷ் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.