வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற நான்கு இளைஞர்கள் இன்று (21) காணாமல் போயுள்ளனர்.
இன்று சுற்றுலா வந்த 10 இளைஞர்கள் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற வேளையில் நால்வர் நீரில் மூழ்கியுள்ளனர்.
கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் வசித்து வந்த 22 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு இளைஞர்களே காணாமல் போயுள்ளனர்.
காணாமல்போன இளைஞர்களை தேடும் நடவடிக்கையை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் முன்னெடுத்துள்ளதாகவும் அவர்கள் நால்வரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எல்லாவல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற காத்தான்குடி, அக்கரைப்பற்றைச் சேர்ந்த நால்வரைக் காணவில்லையென முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பொலிஸார் கல்முனை மற்றும் சாய்ந்தமருதைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே காணாமல் போயுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.