கேரளாவிற்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கேரள போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டார். கேரளாவின் கோட்டயத்திற்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரிடம் விசாரணை நடந்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.