Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிர்மலா தேவி வழக்கிலிருந்து வி.வி.ஐ.பி-க்கள் எஸ்கேப்?

April 27, 2018
in News, Politics, World
0

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் தொடர்புடைய வி.வி.ஐ.பி-க்களைத் தப்பிக்க வைக்க பலவிதங்களிலும் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகச் சி.பி.சி.ஐ.டி வட்டாரத் தகவல்கள் தந்தியடிக்கின்றன!.

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் தொடர்புடையவர்கள் யார் என்று சி.பி.சி.ஐ.டி.போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் போலீஸாரின் சந்தேகப் பார்வையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சிலர் உள்ளனர். அவர்களுக்கும் நிர்மலா தேவி வழக்கில் உள்ள தொடர்பு குறித்து சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகத்துக்கு முழு விவரம் அடங்கிய ரிப்போர்ட் சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்துவது குறித்து உயர்மட்ட ஆலோசனையும் சென்னையில் நடந்தது. இந்தச் சமயத்தில் விசாரணைப் பட்டியலில் உள்ள சிலரை நீக்கும்படி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், அவர்களைத் தவிர்த்து மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. இதன் காரணமாக நிர்மலா தேவி வழக்கில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழக்கப்படாமல் மூடிமறைக்கப்படவுள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, ”நிர்மலா தேவி வழக்கில் அரசியல் தலையீடு அதிகளவில் உள்ளது. இதனால், ஒரு கட்டத்துக்கு மேல் விசாரணை நடத்த முடியாதளவுக்கு எங்களின் கைகள் கட்டப்பட்டுவிட்டன. நிர்மலா தேவியிடம் விசாரித்தபோது, பல்கலைக்கழகத்தில் முக்கிய பதவியில் இருக்கும் ஒரு சிலரின் பெயரையும் உயர் கல்வித்துறையில் ஆளுங்கட்சியின் செல்வாக்கோடு வலம் வரும் சிலரது பெயரையும் அவர் தெரிவித்தார். ஆனால், அவர்களிடம் விசாரணை நடத்த எங்களுக்கு இதுவரை மேலிடத்திலிருந்து அனுமதி கிடைக்கவில்லை.

இதனால், நிர்மலா தேவியின் வழக்கில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் மீது எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. நிர்மலா தேவிக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள செல்வாக்கைப் பார்த்து எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. சாதாரண பேராசிரியையான அவருக்கென்று தனிப்பட்ட அதிகாரம் அங்குள்ளது. அதோடு அரசியல் பிரமுகர்களின் குறுக்கீடு நிர்மலா தேவி வழக்கில் ஆரம்பத்திலிருந்தே இருந்துவருகிறது. அதையெல்லாம்தாண்டிதான் எங்களது விசாரணையை நடத்திவருகிறோம். பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் முழு விவரத்தை தெரிவித்துள்ளனர். அதன்அடிப்படையில் சம்பந்தப்பட்ட வி.வி.ஐ.பி-க்கள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது. இருப்பினும் உயரதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்!’’ என்றனர்.

”நிர்மலா தேவி வழக்கு நீர்த்துப்போகச் செய்வதற்கான பொலிட்டிக்கல் பிரஷர் அதிகரிக்கிறதா?’’ என்று சி.பி.சி.ஐ.டி உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு. ”இந்த வழக்கில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லை. ஒரு சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்திவருகின்றனர். போதிய ஆதாரம் இல்லாமல் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. உரிய ஆதாரமிருந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தின் விசாரணையால் எங்களது விசாரணைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை!’’ என்றார்.

Previous Post

தினகரன் குறித்து ஆரூடம் சொன்ன அமைச்சர் தங்கமணி

Next Post

நடிகர்கள் நம்மை ஆள விட்டுவிடக்கூடாது – நடிகர் விக்னேஷ் ஆவேசம்

Next Post

நடிகர்கள் நம்மை ஆள விட்டுவிடக்கூடாது - நடிகர் விக்னேஷ் ஆவேசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

July 22, 2026
நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

July 22, 2026

Recent News

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

July 22, 2026
நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

July 22, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures