இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். அவரது இயக்கத்தில், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் வரும் செப்.,6ல் ரிலீஸாகிறது(?). நீண்ட நாட்களாக எடுக்கப்பட்ட இந்தப் படம் பல தடைகளைத் தாண்டி வெளியாகிறது.
அந்தப் படத்தைத் தொடர்ந்து, அவர் இயக்கிய ‘துருவ நட்சத்திரம்’ படமும் வெளியாக இருக்கிறது. இந்தப் படமும் வெகு நாட்களாக எடுக்கப்பட்ட படம் தான்.
இவ்விரு படங்களும் ரிலீசான கையோடு, கவுதம் மேனன், ‘செக்க சிவந்த வானம்’ படத்தைப் போல, நான்கு முக்கிய ஹீரோக்களை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார்.
அந்த படத்திற்கு, நடிகர் – நடிகைகளை தேர்ந்தெடுக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. தற்போது மாதவன், சிம்பு, மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த டொவினோ, புனித் ராஜ்குமார் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இன்னும் ஒரு பிரபலமான ஹீரோவை நடிக்க வைக்க பேசி வருகிறார்.