Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டை கட்டியெழுப்பும் உண்மையான நோக்கம் இருப்பின் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் | செல்வராசா கஜேந்திரன்

January 20, 2022
in News, Sri Lanka News
0
நாட்டை கட்டியெழுப்பும் உண்மையான நோக்கம் இருப்பின் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் | செல்வராசா கஜேந்திரன்

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்ற எண்ணம் உண்மையிலேயே ஜனாதிபதியிடம் இருக்குமாக இருந்தால் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் தெரிவித்ததானது,

ஜனாதிபதி தனது உரையில் வாக்களித்த மக்களுக்கு மட்டுமன்றி வாக்களிக்காத மக்களுக்கும் பொறுப்புக் கூறும் கடமை தமக்கு உண்டு என்று குறிப்பிட்டிருந்தார்.

அக்கருத்து அவருக்கு வாக்களித்த சிங்கள மக்கள் பற்றியதா? அல்லது வாக்களிக்காத சிங்கள மக்களை பற்றியதா? அல்லது அவருக்கு வாக்களிக்காத தமிழ்த் தேசிய மக்களையும் சேர்த்துதான் கூறினாரா? என்ற கேள்விகள் உள்ளன.

ஆனால் நடவடிக்கைகளை நோக்கும் போது தமிழ் மக்களை அவர் முற்றாக புறக்கணித்துள்ளார் என்பதனை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

அவரின் உரையில் நீண்ட காலமாக இருக்கும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு எந்தவிதமான தீர்வுகளையும் அவர் முன்வைத்திருக்கவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும். தமிழ் மக்கள் கடந்த காலங்களில் அரசியலமைப்பை நிராகரித்து அவர்களின் உரிமைகளுக்காக போராடி வந்துள்ளனர்.

தமிழ்த் தேசியம், இறைமை, சுயநிர்ணய உரிமை, சமஷ்டித் தீர்வு என கோரியே அவர்களின் போராட்டங்கள் இடம்பெற்று வந்துள்ளன. இந்த கோரிக்கை கைவிடச் செய்யும் நோக்கில் இலங்கை அரசு 80களில் இருந்து நடத்திய இனவழிப்பு யுத்தத்தின் ஒரு பகுதியை அரங்கேற்றியதில் ராஜபக்ஷ அரசுக்கும் அவருக்கும் பெரும் பங்குண்டு.

இந்நிலையில் ஜனாதிபதி தனது உரையில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் குறித்து எதனையும் கூறவில்லை. அவர்களுக்கு வெறும் பொருளாதார பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சனைகளே இருப்பதாக கூறி திசை திருப்பும் வகையில் அவரின் உரை அமைந்துள்ளது.

தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்கள், சிங்கள மயமாக்கல்கள் மூலம் நிலம் பரிக்கப்படுகின்றது. இவற்றுக்கான தீர்வு என்பது ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆவது திருத்தமாக ஒருபோதும் இருக்க முடியாது. அது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களை முன்னிலைப்படுத்தி கையெழுத்திடப்பட்டிருந்தாலும் அதனை அரசாங்கம் மதிக்க வேண்டும்.

எனினும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை மாகாண சபைகள் மற்றும் 13ஆவது திருத்தத்திற்குள் முடக்கிவிட முடியாது. அதனை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இந்த இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரையில் கோட்டாபய ராஜபக்ஷவோ, புத்தப்பெருமான் வந்தாலும்கூட இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பதனை கூறிக்கொள்கின்றேன்.

உங்களுக்கு இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்ற எண்ணம் உண்மையிலேயே இருக்குமாக இருந்தால் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முன்வாருங்கள். தீர்வென்பது தமிழ் மக்கள் விரும்பும் வகையில் அமைய வேண்டும் என்றார்.

 

Previous Post

கொழும்பில் ஜேவிபி ஆர்ப்பாட்டத்தில் முட்டை வீச்சு தாக்குதல்!

Next Post

அதிபர் ஆசிரியர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு இல்லையாம்!

Next Post
இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் கொவிட் தொற்றால் உயிரிழப்பு

அதிபர் ஆசிரியர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு இல்லையாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : ஐ.எம்.எப்பிற்கு அநுர அறிவிப்பு

May 31, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

May 31, 2026
18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026

Recent News

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : ஐ.எம்.எப்பிற்கு அநுர அறிவிப்பு

May 31, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

May 31, 2026
18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures