சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு விசேட அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தேசிய பாதுகாப்புச் சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு (13) கூடியுள்ளது. இதன்போதே இந்த அறிவுறுத்தலை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.