க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஏற்கனவே திட்டமிட்டபடி உரிய நேரத்தில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசெம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. மாகாண மற்றும் வலய பணிப்பாளர்களுடன் இதுதொடர்பில் நேற்று பரீட்சைகள் திணைக்களத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நாளை (15) பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுடன் இதுதொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.