ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் காணப்படும் போட்டித் தன்மை நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மை இல்லை என்பதற்கான சிறந்த எடுத்துக் காட்டாகும் எனவும், அரசியல் ஸ்தீரத் தன்மையில்லாத ஒரு நிலையில் நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய முடியாது எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
கொட்டிகாவத்தைப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற “எளிய” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
இன்று எமது நாட்டில் அரசியல் ஸ்தீரத் தன்மையில்லை என்பதை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அனைவரும் நன்கு அறிந்துள்ளனர். நாம் அன்று நாட்டின் அபிவிருத்தி குறித்து கதைத்துக் கொண்டிருக்க வில்லை. செய்து காட்டினோம். எதிர்வரும் காலத்திலும் நாட்டின் அபிவிருத்திப் பணிகளை செய்து காட்டத் தயாராகவுள்ளோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.