நாட்டில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்து வரும் இரு நாட்களுக்கு காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய இன்றும் (20) நாளையும் (21) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில பகுதிகளுக்கு சுமார் 150 மில்லி மீற்றர் வரையான கடும் மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில், குறிப்பாக வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சுமார் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.