தலைவர் பிரபாகரன் மட்டுமே உண்மையான மிகப் பெரிய தியாகி என்று கூறியுள்ள நடிகை கஸ்தூரி தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தலைவர் பிரபாகரனையும் ஆதரித்துப் பேசி வருகின்றார்.
உண்மையான தலைமைத்துவத்தை தந்தவர் பிரபாகரன் என்றும் மிகச் சிறந்த பெண்ணியத் தலைவர் பிரபாகரன் என்றும் பெண் விடுதலையை சரியாக முன்னெடுத்தவர் பிரபாகரன் என்றும் கஸ்தூரி புகழாரம் சூட்டியுள்ளார்.
தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்டு தலைவரைப் பற்றி பேசியுள்ள கஸ்தூரி தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் இடம்பெறும் ஊக்கப்படுத்தல் நிகழ்வுகளிலும் தலைவரைப் பற்றி தவறாது பேசுவார்.
அத்துடன் தனது சமூக வலைத்தளங்களிலும் தலைவர் பிரபாகரன் குறித்தும் விடுதலைப் புலிகள் குறித்தும் பெருமைப் பதிவுகள் இடுவதன் வாயிலாகவும் சமூக வலைத்தள உலகில் பெரும் ஆதரவு பெற்றவர் கஸ்தூரி.
இதேவேளை நடிகை கஸ்தூரி ஈஸி24நியூஸ் ஏற்பாட்டிலும் ஊடகவியலாளர் கிருபா பிள்ளையின் அழைப்பிலும் ஈஸிஎன்டடைமன்ட் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கனடா வருகின்றார்.