நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் “நடிகர்கள் கோடி கணக்கில் சம்பளம் பெறுகிறார்களே அது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து கமல் கூறியதாவது:
நடிகர்களுக்கு அதிகமாக சம்பளம் வழங்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டை நீண்டகாலமாக சொல்லி வருகிறார்கள். அது இட்லி விலையை போலத்தான். நேரத்துக்கு, இடத்துக்கு தகுந்த மாதிரி கூடும், குறையும். திறமைதான் நடிகர்களின் சம்பளத்தை உயர்த்துகிறது. அவர்களுக்கு மக்கள் தரும் பாராட்டுகள்தான் சம்பளத்தை தீர்மானிக்கிறது. நான் முதன் முதலில் 250 ரூபாய் சம்பளத்துக்குதான் நடித்தேன். என்றார்.