Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நடராஜன் கவலைக்கிடம்: பரோலில் வருகிறார் சசிகலா?

March 19, 2018
in News, Politics, World
0

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கர்நாடகா சிறையில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், சசிகலா பரோலில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்று பிற்பகல் அல்லது நாளை அவர் பரோலில் வெளியே வர இருப்பதாக அவரது வழக்கறிஞர் வட்டார தகவல்கள் கூறுகின்றன.

நெஞ்சுவலி காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை நடராஜனை காண குளோபல் மருத்துவமனை சென்ற டிடிவி தினகரனும், நடராஜனை காண சசிகலா பரோலில் வருவார் என்றும், அதற்கான முயற்சிகளில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டு உள்ளனர் என்றும் உறுதிப்படுத்தினார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு செம்டம்பர் மாதத்தில், சிறுநீரகம், கல்லீரல் நோய் காரணமாக பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற நடராஜன், உறுப்பு மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டு பல உறுப்புகள் மாற்றப்பட்டதை தொடர்ந்து உடல்நிலை தேறி வந்தார்.

அப்போது, மருத்துவமனையில் இருந்த நடராஜனை காண சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, தற்போது மீண்டும் பரோலுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த சசிகலா, சென்னை தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் தங்கியப்படி, தனது கணவர் நடராஜனை மருத்துவமனை யில் அவ்வப்போது சந்தித்து நலம் விசாரித்து வந்தார். அதைத்தொடர்ந்து, அக்டோபர்11 ந்தேதி பரோல் முடிவடைநது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்தியச் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous Post

டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை

Next Post

பத்ம விருதுகள்: தமிழக அரசின் சிபாரிசை நிராகரித்த தேர்வு கமிட்டி

Next Post

பத்ம விருதுகள்: தமிழக அரசின் சிபாரிசை நிராகரித்த தேர்வு கமிட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

July 20, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

July 20, 2026
சாதாரண மக்களின் அரசியலே வெற்றி பெறும் – பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு சஜித் வாழ்த்து

சாதாரண மக்களின் அரசியலே வெற்றி பெறும் – பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு சஜித் வாழ்த்து

July 20, 2026
BREAKING NEWS: உண்மையான ஊடகவிலாளர்களுக்கு முதலிடம் – கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் வசமான  STREET Fest… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 20, 2026

Recent News

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

July 20, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

July 20, 2026
சாதாரண மக்களின் அரசியலே வெற்றி பெறும் – பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு சஜித் வாழ்த்து

சாதாரண மக்களின் அரசியலே வெற்றி பெறும் – பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு சஜித் வாழ்த்து

July 20, 2026
BREAKING NEWS: உண்மையான ஊடகவிலாளர்களுக்கு முதலிடம் – கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் வசமான  STREET Fest… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 20, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures