நகர அபிவிருத்து தொடர்பில் ஆற்றல் மிக்க வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதே தனது நோக்கம் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெல்மடுல்ல நகரில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.
பாதுகாப்பான நாடொன்றினை கட்டியெழுப்புவதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது கொழும்பு நகரை ஆசியாவின் வளர்ச்சி அடைந்து வரும் நகரமாக மாற்ற தனக்கு முடிந்ததாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.