ரோஜா மாளிகை படத்தை தயாரித்த பர்ஸ்ட் லுக் மூவிஸ் பட நிறுவனம், அடுத்ததாக தயாரிக்கும் படம் தோள் கொடு தோழா. கதாநாயகனாக ஜெய் ஆகாஷ், போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். மூன்று புதுமுகங்களாக ஹரி, ராகுல், பிரேம் நடிக்கிறார்கள்.
கதாநாயகிகளாக மும்பையை சேர்ந்த அக்ஷிதா, பெங்களூரை சேர்ந்த ஜெயஸ்ரீ நடிக்கிறார்கள். இவர்கள் தவிர நாசர், ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, சிங்கம்புலி, முத்துக்காளை ஆகியோர் நடிக்கிறார்கள். கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். லியோ பீட்டர் இசை அமைக்கிறார். புதுமுக இயக்குனர் கவுதம் இயக்குகிறார்.