விஷால் நடித்த சண்டக்கோழி 2ம் பாகம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் இரண்டாம் பாக கான்செப்டில் ஆர்வமின்றி இருந்தார். இதற்கிடையில் அவர் நடித்து வெற்றி வெற்ற இரும்புத்திரை 2ம் பாகத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதன் இயக்குனர் மித்ரன் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இரும்புத்திரை 2ம் பாக ஐடியா இப்போதைக்கு இல்லை என்று அவரும் தெரிவித்து விட்டார்.
மிஷ்கின் இயக்கிய துப்பளிவாளன் படத்தின் போதே அதன் இரண்டாம் பாகமும் உருவாகும், 4 பாகத்திற்கான கதை தன்னிடம் உள்ளது என்று மிஷ்கின் தெரிவித்திருந்தார். தற்போது துப்பறிவாளன் இரண்டாம் பாகம் ஸ்கிரிப்டை மிஷ்கின் முடித்து விட்டார் என்றும், அதற்கு விஷால் சம்மதம் தெரிவித்து விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தற்போது அயோக்யா படத்தை முடித்து விட்ட விஷால், சுந்தர்.சி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். அந்தப்படம் முடிந்த பிறகு துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் நடிக்கலாம் என்று தெரிகிறது. மிஷ்கின், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் சைக்கோ படத்தை இயக்கி வருகிறார்.