2017ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் தமது பெயரை பதிவு செய்துக்கொள்ள தவறிய வாக்காளர்களுக்கு செப்டம்பர் 6ஆம் திகதி வரையில், தமது பெயரை பதிவு செய்து கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் நகல் கிராம சேவையாளர்கள், பிரதேச செயலாளர் காரியாலயங்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதனை அவதானித்து தங்களது பெயர் அதில் இணைக்கப்பட்டிருக்காது விடத்து அது தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.