தொழிநுட்ப கோளாறு காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் ஒருநாள் சேவை இன்று இடம்பெறாது என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் வியானி குணதிலக்க இதனை எமது செய்திபிரிவிற்கு தெரிவித்தார்.
கணினி பிரிவில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே இன்றைய தினம் ஒரு நாள் சேவையை வழங்கமுடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அடையாள அட்டைக்கான ஒரு நாள் சேவையை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.