துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது.
அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.
பூகம்பம் ஏற்பட்ட பகுதி துருக்கி – சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது. பூகம்பத்தால் கட்டிடங்கள் குலுங்கின.
அதேவேளை, இந்த பயங்கர பூகம்பத்தால் 10 உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேவேளை துருக்கில் ஏற்பட்ட இந்த பூகம்பம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உட்பட அண்டை நாடுகளில் உணரப்பட்டுள்ளது.