துனிசிய முன்னாள் ஜனாதிபதியின் உறவினர்கள் கனடாவில் தலைமறைவு?

துனிசிய முன்னாள் ஜனாதிபதியின் உறவினர்கள் கனடாவில் தலைமறைவு?

ஆபிரிக்க நாடான துனிசியாவின் முன்னாள் ஜனாதிபதி அபிதின் பென் அலியின் நெருங்கிய உறவினர்களுக்கு கனடாவில் புகலிடம் வழங்க மறுக்கப்பட்டதால் அவர்கள் கனடாவில் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 1987ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை துனிசியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த பென் அலியின் மைத்துனர் பெல்ஹஸென் ட்ரபெல்சி மற்றும் அவரது குடும்பத்தினர் 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துனிசியா நாட்டிலிருந்து வெளியேறி கனடாவின் மண்ட்ரீயல் மாகாணத்தில் குடியேறினர்.

துனிசியாவில் 2011ஆம் ஆண்டில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சியின் காரணமாக பென் அலியின் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இவர்கள் அங்கிருந்து சென்றனர்.எனினும் துனிசியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் புகலிடம் வழங்க கனேடிய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

எனினும், கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் கனடாவிலேயே தங்கி வந்துள்ளனர். இந்நிலையில், துனிசிய முன்னாள் ஜனாதிபதியின் சொந்தங்கள் அனைவரையும் நாடுகடத்துவதற்காக கடந்த மே 24ஆம் திகதி கனேடிய குடியமர்வு அதிகாரிகள் சென்றுள்ளனர்.

அவர்களது வீட்டில் சென்று பார்த்தபோது அங்கிருந்த அனைவரும் தலைமறைவாகியுள்ளது அதிகாரிகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உடனடியாக அதிகாரிகள் அவர்களது வழக்கறிஞரை தொடர்புக்கொண்டபோது, ‘அவர்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது. தன்னாளும் அவர்களை தொடர்கொள்ள முடியவில்லை’ என அவர் பதிலளித்துள்ளார்.எனவே அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருவதாக கனேடிய குடியமர்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News