தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதமருக்கும் இடையில் இரகசிய உடன்பாடுகள் எதுவும் கிடையாது. மாறாக வடக்கு/கிழக்கு மாகாணத்தில் காணப்படும் சில பிரச்சிகைகள் மற்றும் அதற்கு தீர்வு பெற்றுக்கொள்வது குறித்தே பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதமருக்கும் இருக்கும் இரகசிய உடன்பாடுகள் காரணமாகவே, நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அவருக்கு ஆதரவாக கூட்டமைப்பு வாக்களித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.
இது குறித்து யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், “நாட்டில் காணப்படும அரசியல் சூழலை நோக்கும் போது என்றும் இல்லாத வகையில் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி உள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஆதரவளித்து வருகிறதே தவிர வேறு நோக்கங்கள் இல்லை.
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட சந்தர்ப்பத்தில் மட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளின் போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களின் வாக்குகள் மிகவும் முக்கியமானவை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதமருக்கும் இடையில் இரகசிய உடன்பாடுகள் எதுவும் கிடையாது. மாறாக வடக்கு மாகாணத்தில் காணப்படும் சில பிரச்சிகைகள் மற்றும் அதற்கு தீர்வு பெற்றுக்கொள்வது குறித்தே பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.

