Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தீர்வுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் ; காணாமல் போன உறவுகளின் சங்கம்!

August 29, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தீர்வுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் ; காணாமல் போன உறவுகளின் சங்கம்!

தமிழர் சுயநிர்ணய உரிமை மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்வியை சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) முன் கொண்டுசெல்வதற்கோ அல்லது ஐ.நா. பொதுச் சபையின் மூலம் ஆலோசனைக் கருத்தைப் பெறுவதற்கோ பிரித்தானியா சட்ட வழிமுறைகளை ஆராய வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வவுனியாவில் சனிக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர்கள், எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய தமிழ்த் தாய்மார்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றும் உருக்கமாகக் கேள்வி எழுப்பினர்.

ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் தெரிவித்த முக்கிய கருத்துக்கள், 

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கருத்துத் தெரிவித்த அவர்கள், கடந்த 3,478 நாட்களாகத் தங்களது பிள்ளைகளையும் அன்புக்குரியவர்களையும் தேடி வீதியில் நின்று போராடி வருவதாகச் சுட்டிக்காட்டினர்.

1948ஆம் ஆண்டு பிரித்தானியா அதிகாரத்தை ஒப்படைத்தபோது உருவாக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு, தமிழர்களின் அரசியல் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிவிட்டது. காலனித்துவ ஆட்சியிலும் அதன்பின்னரான அதிகாரக் கையளிப்பிலும் பிரித்தானியா வகித்த பங்கு குறித்து முறையான வரலாற்று மற்றும் சட்ட ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

அரசாங்க மாற்றங்கள், ஆணைக்குழுக்கள் மற்றும் வாக்குறுதிகள் எவையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதற்கான நம்பகமான பதிலை இதுவரை வழங்கவில்லை.

நேரடி வழக்கிற்கான சட்ட அதிகாரம் பொருந்தாத பட்சத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) மூலம் சர்வதேச நீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்தைப் (Advisory Opinion) பெறுவதற்குப் பிரித்தானிய அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும்.

எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு அரசியலமைப்பு மாற்றங்கள் தோல்வியடைந்துள்ளதால், தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்பதும், அமைதியான ஜனநாயக நடைமுறையின் மூலம் சுதந்திர தமிழ் ஈழத்தை உருவாக்குவதும் ஒரு சர்வதேச அரசியல் தீர்வாகப் பரிசீலிக்கப்பட வேண்டும்.

இலங்கையில் தீர்க்கப்படாமல் இருக்கும் தமிழர் தேசியப் பிரச்சினைக்குச் சர்வதேச சட்டத்தின் மூலம் நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தர பிரித்தானியாவும் சர்வதேச சமூகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

Previous Post

எரிபொருள் நுகர்வு குற்றச்சாட்டு அறிவியல் பூர்வமற்றது! NPP அரசாங்கத்தை சாடிய மகிந்த யாப்பா

Next Post

கோதுமை மா விலை உயர்வை தொடர்ந்து பராட்டா, ரொட்டி விலைகளும் உயர்வு!

Next Post
கோதுமை மா விலை உயர்வை தொடர்ந்து பராட்டா, ரொட்டி விலைகளும் உயர்வு!

கோதுமை மா விலை உயர்வை தொடர்ந்து பராட்டா, ரொட்டி விலைகளும் உயர்வு!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஹிப் ஹொப் தமிழா நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அப்டேட்

ஹிப் ஹொப் தமிழா நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அப்டேட்

August 29, 2026
தீர்மானம் மிக்க சுப்பர் லீக் போட்டியில் றினோன் – புளூ ஸ்டார் இன்று மோதுகின்றன

தீர்மானம் மிக்க சுப்பர் லீக் போட்டியில் றினோன் – புளூ ஸ்டார் இன்று மோதுகின்றன

August 29, 2026
கோதுமை மா விலை உயர்வை தொடர்ந்து பராட்டா, ரொட்டி விலைகளும் உயர்வு!

கோதுமை மா விலை உயர்வை தொடர்ந்து பராட்டா, ரொட்டி விலைகளும் உயர்வு!

August 29, 2026
தீர்வுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் ; காணாமல் போன உறவுகளின் சங்கம்!

தீர்வுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் ; காணாமல் போன உறவுகளின் சங்கம்!

August 29, 2026

Recent News

ஹிப் ஹொப் தமிழா நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அப்டேட்

ஹிப் ஹொப் தமிழா நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அப்டேட்

August 29, 2026
தீர்மானம் மிக்க சுப்பர் லீக் போட்டியில் றினோன் – புளூ ஸ்டார் இன்று மோதுகின்றன

தீர்மானம் மிக்க சுப்பர் லீக் போட்டியில் றினோன் – புளூ ஸ்டார் இன்று மோதுகின்றன

August 29, 2026
கோதுமை மா விலை உயர்வை தொடர்ந்து பராட்டா, ரொட்டி விலைகளும் உயர்வு!

கோதுமை மா விலை உயர்வை தொடர்ந்து பராட்டா, ரொட்டி விலைகளும் உயர்வு!

August 29, 2026
தீர்வுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் ; காணாமல் போன உறவுகளின் சங்கம்!

தீர்வுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் ; காணாமல் போன உறவுகளின் சங்கம்!

August 29, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures