Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தீபச்செல்வனின் பேஸ்புக் முடக்கம் | கருத்துச் சுதந்திரம் மீதான ஒடுக்குமுறை | கேசுதன்

April 16, 2022
in News, Sri Lanka News
0
தீபச்செல்வனின் பேஸ்புக் முடக்கம் | கருத்துச் சுதந்திரம் மீதான ஒடுக்குமுறை | கேசுதன்

இலங்கையில் கருத்துச்சுதந்திரம் என்பது ஒடுக்கப்பட்ட ஒன்றே. அதிலும் தமிழ் மக்களின் கருத்துக்களுக்கு இடமளிக்கப்படாமை என்பது இனவாத ஒடுக்குமுறையாகவே கருதப்பட வேண்டும். தமிழின மக்கள் படும் கஷ்டத்தினை எழுத்துருவில் உருவாக்குவதும் சமூக ஊடகங்களிலும் தெரியப்படுத்துவதும் தமிழ்  எழுத்தாளர்களின் பணிகளாகும்.

இதில் எமது ஈழத்து கவிஞர் தீபச்செல்வன் அவர்களின் முகநூல் பக்கம் ஸ்ரீலங்கா அரசு ஆதரவுத் தரப்பால் முடக்கப்பட்டுள்ளது. ஈழமக்களின் விடுதலை போராட்டம் எழுத்துவடிவில் தத்ரூபமாக உலக அரங்கிற்கு எடுத்து காட்டிய ஓர் உன்னத எழுத்தாளர் தீபச்செல்வன். விசாரணை என்றபெயரில் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் இருந்து இன்று வரைக்கும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறார். எம்முடன் வலிகளையும் உணர்வுகளையும் உணர்ந்த உன்னத படைப்பாளி எதற்கும் அஞ்சாது தனது எழுத்துக்கள் மூலம் உலக அரங்கிற்கு எடுத்துக்காட்டிய வண்ணம் உள்ளார்.

தேச பற்றும் இனப்பற்றும் உள்ள எமது எழுத்தாளரினால் தமிழ் மக்களின் துன்பதுயரங்ககளை உலகுக்கு எடுத்துக்காட்டிய உன்னத எழுத்தாளர். நாவல்கள் மூலமும் கவிதைகள் மூலமும் இன வன்முறைகளையும் இன ஒடுக்குமுறைகளையும் எழுத்துருவில் வடிவமைத்த உன்னத படைப்பாளி. எதற்கும் துணிந்து நம் மக்களை இன ஒடுக்குமுறைகளில் காப்பாற்ற இருந்து காப்பாற்ற எழுத்துக்களுக்கு உயிரையும் உணர்வுகளையும் உருவெற்றிய மாபெரும் படைப்பாளி என்றே கூற முடியும்.

வன்கொடுமை அரசு நினைத்தது என்னவெனில் எழுத்தாணி போராளி தீபச்செல்வனின் முகப்புத்தகத்தை முடக்கினால் அரசுக்கு எதிராக மக்கள் செய்யும் புரட்சியையும் கவிஞரின் எழுத்துக்களையும் முடக்கலாம் என முடிவு செய்துவிட்டது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும் தமிழர்களுக்கு இருக்கும் கருத்து சுத்தந்திரமும் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்படுகிறது என்று. முகப்புத்தகம் என்பது எழுத்துருவாக்க போராளிகளின் சிறு துரும்பு அதை முடக்குவதால் முடங்கிபோவதற்கு துணிந்தவரல்லர்.

களம் காணா கயவர்களுக்கு புரியுமா களம் கண்டு போராடிய உன்னத மாவீரர்களின் தியாகங்கள். அனைத்தையும் உலக மக்களுக்கு எடுத்துக்காட்டிய உன்னத எழுத்தாளர் பட்டியலில் முதன்மையானவர் தீபச்செல்வன். எழுத்துக்களுக்கு உயிர் உள்ளது என்பது உண்மையே அரசு அலறும் விதத்தில் ஒவ்வொரு எழுத்துக்களுக்கு உயிரேற்றி உணர்வளித்துள்ளார் தீபச்செல்வன். அதனால் தான் முகப்புத்தகம் எனும் சிறுதுரும்பை முடக்கியுள்ளனர். எளிய நடைமுறையில் உணர்வேற்றும் இவரின் கவிதைகள் மக்களின் பார்வைக்கு செல்வதற்காக முகப்புத்தகத்தை சிறு களமாக கொண்டு தனது பதிவுகளை பகிர்ந்தார்.

கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதற்காக தீபச்செல்வன் அவர்களின் முகபுத்தகம் முடக்கப்பட்டுள்ளது. இணையம் என்பது ஒருவழிப்பாதை அல்ல என்பது உணராத சிங்கள அரசியல் வட்டாரம் நகைப்புக்குரியதே. தீபச்செல்வனின் படைப்புகள் நிறுத்தப்படமாட்டாது அத்துடன் அவருடைய இணையதள முகவரியை தொடர்ந்தும் பின்பற்றுங்கள். மக்களின் ஆதரவு கணிசமான அளவு உள்ள நிலையில் அவரின் படைப்புக்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

கேசுதன்

 

Previous Post

கொல்கத்தாவை வீழ்த்தி 3 ஆவது தொடர் வெற்றியை பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

Next Post

இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ?

Next Post
2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : ஐ.எம்.எப்பிற்கு அநுர அறிவிப்பு

May 31, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

May 31, 2026
18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026

Recent News

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : ஐ.எம்.எப்பிற்கு அநுர அறிவிப்பு

May 31, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

May 31, 2026
18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures